கண்ணை குறுடாக்கிவிட்டு ஓவியம் பார்க்க சொல்லும் ஜெ: கருணாநிதி தாக்கு
சென்னை:
நாட்டின் பிரஜைகளைக் குறிப்பிடும் போது அது பெண்ணாக இருந்தால் குடிமகள் என்று சொல்லத்தேவையில்லை. அதற்குப் பதிலாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இந்தியக் குடியுரிமைஉள்ள என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமீபத்தில் குடிமகன் என்பதற்கு இணையாக பெண்களைக் குறிப்பிட குடிமகள் என்று அழைக்க வேண்டும் என்றஅரசாணையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
இதற்கு முரசொலி கேள்வி-பதில் பகுதியில் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்து:
குடிமகள் என்ற வார்த்தை தேவையில்லை. அதற்குப் பதிலாக இரு பாலாருக்கும் பொருந்தும் வகையில் ஒருபொதுச் செல்லை பயன்படுத்தலாம். இந்தியக் குடியுரிமை உள்ள என்ற பதம் அதற்கு பொருத்தமாக இருக்கும்என்று நினைக்கிறேன்.
அதேபோல, தாயின் பெயரை இனிஷியலாக போடுவதற்கு தனி அரசானை தேவையில்லை. தாயின் பெயரைஇனிஷியலாக போடுவதற்கு தமிழகத்தில் எப்போதும் தடை இருந்ததே இல்லை.
ஏழைப் பெண்களுக்கு ரூ. 10,000 உதவி வழங்கும் திருமண உதவித் திட்டம், பொங்கல் பண்டிகையின்போதுபெண்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை அடியோடு நிறுத்தி விட்டு, அந்தப் பெண்களுக்காகஎன்று கூறி குடிமகள், தாயின் இனிஷியல் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வருவது அழகான கண்களைக்குருடாக்கி விட்டு ஓவியத்தை பாருங்கள் என்று கூறியிருப்பதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications