கள்ளச் சாராயம்: 3 இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே கள்ளச் சாராயத்திற்கு 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 3 காவல்துறை அதிகாரிகள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பென்னாடம் பகுதியை அடுத்த மீனவபுரி சோழன் நகரில் கள்ளச் சாராயம் குடித்து பெண் உள்பட 4பேர் பலியாயினர்.
இச் சம்பவம் குறித்து கடலூர் சரக டிஐஜி விஜயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறைஅதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இப் பகுதியில் கள்ளச் சாராயம் கொடி கட்டிப் பறப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து பென்னாடம் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார், சப் இன்ஸ்பெக்டர்
சசிக்குமார், விருத்தாச்சலம் மது விலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரபாபு ஆகியோரை சஸ்பென்ட் செய்து டிஐஜிஉத்தரவிட்டுள்ளார்.
கள்ளச் சாரயம் விற்ற சகீனா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications