தனியார் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகளின் படிப்புக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்ஏழை, எளிய மாணவர்களின் சாபத்திலிருந்து தப்ப முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுவதாகஅண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால் இது சமூக நீதிக்கு எதிரானது.
இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளை எட்டிப் பார்ப்பதற்குக் கூடஇயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுயநிதி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிடம் தமிழக அரசுஅடிபணிந்து போய் விட்டது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஏழை மாணவ, மாணவிகள் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த அளவுக்கு ஏழை மாணவ, மாணவிகளால் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. எனவேஇக்கட்டணங்களைப் பாதியாகக் குறைக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுடைய சாபத்திலிருந்து தமிழக அரசு தப்பவே முடியாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications