For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் சார்ஸ் நோயாளி: சிங்கப்பூரிலிருந்து வந்தவர்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

சிங்கப்பூரில் இருந்து குஜராத் திரும்பிய வாலிபருக்கு சார்ஸ் நோய்க்கான அறிகுறிகள் உள்ளதைத் தொடர்ந்து அவர் அரதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

நரோடாவைச் சேர்ந்த ஹரீஷ் என்ற அந்த சிங்கப்பூலில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி இந்தியா திரும்பினார்.

நரோடாவில் தனது வீட்டில் இருந்த ஹரீசுக்கு தாய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு சார்ஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து அவர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது ரத்தம், சிறுநீர் ஆகியவைபரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியர்கள் விடுவிப்பு:

இதற்கிடையே சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் ஹைதராபாத் செஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரு ஆஸ்திரேலியர்களும்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் சார்ஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

வில்காக்க் லூக் சார்லஸ், ராபர்ட் ஜெசன் குடால் என்ற அந்த இருவரும் தாய்லாந்தில் இரும்து கடந்த 23ம் தேதி ஹைதராபாத் வந்தனர்.இவர்களுக்கும் இவர்களுடன் விமானத்தில் வந்த 23 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இப்போது இந்த இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். மற்ற 23 பேரும் தொடர்ந்து தனி அறைகளில் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X