பெற்றோர் திட்டியதால் 2 சிறுவர்கள் தற்கொலை
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வேலைக்குப் போகச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த 2 சிறுவர்கள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் பாண்டியன். இவர்களில்பாண்டியன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தான்.
செல்வம் உள்ளூரிலேயே வேலை பார்த்து வந்தான். இருவரும் நண்பர்கள். சமீபத்தில் பாண்டியன் வேலையை விட்டு விட்டுஊருக்கு வந்து விட்டான். அவனும், செல்வமும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதனால் இருவரது வீட்டிலும் அவர்களைத் திட்டினர். வேலைக்குப் போகுமாறு கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த இருவரும் பூச்சி மருந்து குடித்தனர். தோட்டத்தில் மயங்கிக் கிடந்த அவர்கள் உடனடியாக பெரியகுளம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால்,சிகிச்சை பலனளிக்காது இறந்தனர்.