ஈரோட்டில் விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் சாலை மறியல்: 2,500 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் சாலை மறியல் மேற்கொண்ட விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 2,500 பேரைப் போலீசார்கைது செய்தனர்.
விசைத் தறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "சென்வாட்" வரிகளை நீக்கக் கோரி இந்த சாலை மறியல் போராட்டம்மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகே ஆயிரக்கணக்கான விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள்உள்ளிட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 2,500 பேரைக் கைதுசெய்தனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications