For Daily Alerts
Just In
பில்லி-சூனியம்: மந்திரவாதி படுகொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் பில்லி சூனியம் வேலைகளில் ஈடுபட்டு வந்த மந்த்ரீகவாதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு சாரதி தெருவில் வசித்து வந்தவர் மஸ்தான் மஜீத். இவர் மாந்த்ரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.இதனால், இவரது 2 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர்.
இந் நிலையில் தனது வீட்டின் முன் புறம் நிர்வாண கோலத்தில் மஜீத் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடலின்பல்வேறு இடங்களில் பயங்கரமாகவெட்டுக் காயங்கள் இருந்தன.
வீட்டின் உள்ளே பில்லி சூனியம் வைப்பதற்கான பூஜைகளில் அவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மந்திர வேலைகளால் பாதிக்கப்பட்டதாக நினைத்த யாரோ தான் இவரைக் கொலை செய்திருக்க வேண்டும்என்று போலீசார் கருதுகின்றனர்.
Story first published: Monday, May 12, 2003, 5:30 [IST]