8,000 போலீஸ் வேலைக்கு 3 லட்சம் பேர் போட்டி: பட்டாதாரிகள் குவிந்தனர்
சென்னை:
தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கு ஆள் எடுப்பதற்கான முதல் கட்ட தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படவுள்ளது. இதற்கு 3 லட்சத்து 12,000 பேர்விண்ணப்பித்துள்ளனர். இதனால் தேர்வு நடக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கூடியதால் அவர்களைக்கட்டுப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10ம் வகுப்பாகும். ஆனால், எம்.ஏ., எம்.எஸ்.சி., பி.ஏ, பிகாம் படித்தவர்கள் தான் பெருமளவில்வந்திருந்தனர்.
மாவட்ட எஸ்.பி. அலுவலங்களில் தொடங்கிய இந்தத் தேர்வில் வயது, கல்வித்தகுதி சான்றிதழ்கள் சரி பார்ப்பு, உடல் திறன்ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. நெடுந்தூர ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகியவை மூலம் உடல் திறன்பரிசோதிக்கப்பட்டது.
இதில் தேர்ச்சியடைவோருக்கு இன்டர்வியூ நடக்கும். சென்னையில் மட்டும் 13,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தேர்வு நடக்கிறது.