திருச்சி நகை கடை அதிபரிடம் கொள்ளையடித்த டிரைவர் மும்பையில் சிக்கினான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி நகைக்கடை அதிபரை சென்னையில் கடத்தி, அவடமிருந்து ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்க, வைரநகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிய டாக்சி டிரைவர் சீதாராமனை சென்னை போலீஸார் மும்பையில்கைது செய்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரான சுபாஷ்சந்த் ஜெயின் சென்னை வந்து நகைகள் வாங்குவது வழக்கம்.அதுபோலவே, சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த அவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கினார்.

அதன் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தனது நண்பரின் காரில் சென்றார். காரை ஓட்டிச் சென்ற டிரைவர்சீதாராமன் இந்த நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.

காருடன் ஜெயினை வேளச்சேரிக்குக் கடத்திச் சென்ற அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கத்தியால்குத்திவிட்டு நகைகளுடன் தப்பினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சீதாரமான் உள்ளிட்டவர்களைப் பிடிக்கதனிப் படைகள் அமைக்கப்பட்டன. போலீஸான் தீவிர தேடுதல் வேட்டையில், சீதாராமனின் இரண்டு சகோதரிகள்திருப்பூரில் பிடிபட்டனர்.

அவர்களிடம் சீதாராமன் கொடுத்து வைத்திருந்த ரூ. 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. அவர்கள்இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான சீதாராமன் மும்பையில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து மும்பையில் உள்ள கல்யாண் பகுதிக்கு எழும்பூர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் ஆறுமுகச்சாமிதலைமையிலான போலீஸ் படை விரைந்தது.

அங்கு பதுங்கியிருந்த சீதாராமனை மாறு வேடத்தில் சென்ற இந்த போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைதுசெய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் மீட்டனர்.

இதையடுத்து சீதாராமனை விமானம் மூலம்சென்னை கொண்டு வந்தனர். இப்போது அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+