For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிகிச்சை செய்யாததால் காலை இழந்த சிறுவன்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்காலை இழந்தான்.

தமிழகம் முழுவதிலும் அரசு டாக்டர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் விபத்தினால் காயமடைந்து கொண்டுவரப்பட்ட இளைஞர் இளையராஜா டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்யாத காரணத்தினால் உயிரிழந்தார்.

இந் நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காதகாரணத்தால் அவனது கால் பறிபோயுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற சிறுவன் காலில் பலத்தகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் வராத காரணத்தால் காலில் சீழ் கட்டிக் கொண்டது. இதையடுத்துஅவன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனது காலை துண்டித்தால் மட்டுமேஉயிரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து அவனது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இவன்ஊனமானதைத் தடுத்திருக்க முடியும் என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X