For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி குண்டு வெடிப்புகளில் 91 பலி: 9 இந்தியர்கள் காயம்

By Staff
Google Oneindia Tamil News

ரியாத்:

சவுதி தலைநகர் ரியாதில் அல்-கொய்தா அமைப்பினர் நடத்திய 9 தற்கொலைத் தாக்குதல்களில் 91 பேர்உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த எண்ணிக்கையின் அளவு மேலும் அதிகமாக இருக்கலாம்எனவும் கூறியுள்ளது.

ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 29 தான் என சவுதி கூறியுள்ளது. இதில் 9 பேர் தற்கொலைத் தாக்குதல்நடத்திய தீவிரவாதிகள் எனவும் அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், உடைந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றுகூறியுள்ளது. அதே போல காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 50ல் இருந்து 200 ஆக உயர்ந்துவிட்டது. இதில்9 பேர் இந்தியர்களாவர். இவர்களில் அகமத் முனீர் என்பவர் மட்டும் மிக பலத்த காயமடைந்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது அல்-கொய்தாதீவிரவாதிகள் கார்களில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட 9 கார்கள் இதற்குபயன்படுத்தப்பட்டன.

தாக்குதலில் பல மாடிக் கட்டடங்கள் சிதைந்து உருக்குலைந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட கார்களும் சிதைந்துள்ளன.தாக்குதல் நடத்திய 9 பேரும் கார்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலின் வருகையையொட்டி இத் தாக்குதல் நடத்தப்பட்டது.ஆனாலும் அவர் திட்டமிட்டபடி சவுதி வந்தார். சிதறிக் கிடந்த கட்டட இடிபாடுகளை அவர் நேரில்பார்வையிட்டார்.இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க அமெரிக்க எப்.பி.ஐ. படையினர் சவுதி விரைந்துள்ளனர். இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் நடக்கலாம் என்று தெரியவந்துள்ளதால் சவுதியில் உள்ள தனது தூதரகஊழியர்களின் பெரும்பாலானவர்களை உடனே நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X