சசிகலாவுடன் தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ஜெயாலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலாவுடன் இன்று தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச்சென்றார்.
அவர் இரு வார காலம் அங்குள்ள தனது திராட்சை தோட்டப் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுப்பார் என்றுதெரிகிறது.
இன்று காலை 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இதற்காக மருத்துவமாணவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த அமைச்சர் செம்மலையும் அதை பாதியில் விட்டுவிட்டு விமானநிலையம் வந்தார்.
அவரிடம் பேச்சுவார்த்தையின் விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்த பின் விமானம் ஏறினார்.
முதலில் 14ம் தேதிக்குள் டான்சி தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்தன.இதனால் தனது ஹைதராபாத் பயணத்தை சில நாட்கள் ஜெயலலிதா ஒத்தி வைத்திருந்தார். ஆனால்,நீதிமன்றங்களின் கோடை விடுமுறைக்குப் பின்னரே தீர்ப்பு வரும் என்று இப்போது தகவல்கள் வரஆரம்பித்துள்ளன. இதையடுத்து ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த வாரம் உலக வங்கிக் குழு சென்னை வரும்போது ஜெயலலிதாவும் ஒரிரு நாட்கள் சென்னை வந்துவிட்டுமீண்டும் ஹைதராபாத் செல்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications