மூதாட்டி தீக்குளித்து சாவு: பிணத்தை தோண்டியெடுத்து போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மேலமடை பகுதியில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட 85 வயது மூதாட்டியின்உடலை அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து உடலைத் தோண்டியெடுத்து பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு வயது 85. இவர் தனது உடலின் மீதுமண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரது உடலை, உறவினர்கள் போலீஸாருக்குத் தெரியாமல் புதைத்து விட்டனர்.
ஆனால் தகவல் அறிந்ததும், கருப்பாயூரணி போலீஸார் விரைந்து வந்து புதைத்த உடலைதோண்டியெடுத்தனர். பின்னர் அதை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications