ஜெலாட்டின் குண்டுகள் வெடித்து சிதறி 2 சிறுவர்கள் பலி: உடல்களை எரித்துவிட்டு பெற்றோர் தலைமறைவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கிணறு தோண்டுவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டின் வெடி குண்டுகள்வெடித்துச் சிதறியதில் 2 சிறுவர்கள் பலியாயினர். அவர்களின் உடல்களை, சிறுவர்களின் தந்தையேவயல்வெளியில் வைத்து எரித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணீர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் கிணறுதோண்டுவதற்காக ஜெலாட்டின் வெடி மருந்துகளை வீட்டில் வைத்திருந்தார். அவர் இந்த குண்டுகளைவெடிபொருள்கள் கடையில் இருந்து உரிய முறையில் வாங்கவில்லை.
சட்டவிரோதமாக குண்டு தயாரிக்கும் கும்பல்களிடம் இதை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
இந்த வெடி குண்டுளை எடுத்து அவரது மகன்களான முத்துசாமி, ரமேஷ் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். அதற்கு பேட்டரி இணைப்பும் கொடுத்துள்ளனர். அப்போது அந்த குண்டுகள் பயங்கரமாகவெடித்துச் சிதறின.
இதில் இரு சிறுவர்களுமே உடல் சிதறி இறந்தனர். இதையடுத்து அந்த வீட்டை நோக்கி கிராம மக்கள் ஓடிவந்தனர். அப்போது வீட்டில் ஸ்டவ் வெடித்துவிட்டதாகக் கூறி மக்களை அங்கிருந்து விரட்டியடித்தார்ராஜேந்திரன்.
இதையடுத்து மகன்களின் உடல்களை வயலுக்குக் கொண்டு சென்ற ராஜேந்திரனும் அவரது மனைவிபெரியம்மாளும் அவற்றை எரித்துள்ளனர். பின்னர் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் வயலில் இருந்து பிணங்கள் எரியும் வாடை வருவதைக் கண்ட மக்கள் ஓடிச் சென்று பார்த்தபோதுதான் உண்மை வெளியானது.
வெடிகுண்டுகளை வீட்டில் சட்ட விரோதமாக வைத்திருந்ததால் அது தொடர்பாக தான் கைது செய்யப்படலாம்என்று பயந்து தான் தனது மகன்களின் மரணத்தைக் கூட ஊராரிடம் மறைத்ததாகத் தெரிகிறது.
தலைமறைவாகிவிட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications