For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக- பாண்டி மாணவர்களின் ஒற்றுமை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பிளஸ் டூ தேர்வில் தமிழகத்தைப் போலவே, பாண்டிச்சேரியிலும், மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே போல தமிழகத்தைப் போலவே அங்கும் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த முறை பெருமளவில்சரிந்துள்ளது.

பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாநில கல்வி அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 87.08 சதவீதமாக இருந்தது.

இந்த ஆண்டு, 16.17 சதவீதம் குறைந்து, 70.91 ஆக உள்ளது. (தமிழகத்திலும் 9 சதவீதம் சரிந்துள்ளது)பாண்டிச்சேரியில் 71.89 சதவீதம் பேரும், காரைக்காலில் 66.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 73.75சதவீத மாணவிகளும், 67.94 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிதத்தில் 12 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு151 பேர் சென்டம்போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்பியலில் 8 பேரும் (கடந்த ஆண்டு20 பேர்), வேதியியலில் 10பேரும் (கடந்த ஆண்டு 19 பேர்) நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர்.

பாண்டிச்சேரி, லாஸ்பேட் புனித ஜோசப் கிளினி பள்ளி மாணவி சந்தியா 1182 மதிப்பெண்கள் பெற்றுமாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்துள்ளார்.

ராமதாஸ் பேரன்கள் சாதனை:தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பேரன்கள் சாதனை படைத்துள்ளனர்.

திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் படித்து வந்த ராமதாசின் பேரன் பிரதீவன் மாவட்டத்திலேயே முதல்மாணவராக வெற்றி பெற்றுள்ளார். மூன்று பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார். ராமதாசின் மகள் டாக்டர்ஸ்ரீகாந்தி- பரசுராமனின் மகன் இவர்.

அதே போல இன்னொரு பேரன் நிரஞ்சனும் 3 பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X