இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர் நியமனம்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக ரியாஸ் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் நல்லுறவுகளைத் துவக்குவது தொடர்பாக இரு நாட்டுபிரதமர்களும் சமீபத்தில் தங்கள் விருப்பங்களை வெளியிட்டனர். இதையடுத்து தூதரக ரீதியிலானஉறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்தன.
அதன்படி கடந்த 13ம் தேதி பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக சிவ்சங்கர் மேனன்நியமிக்கப்பட்டார். சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த அவரை பாகிஸ்தான் தூதராக நியமித்ததுமத்திய அரசு.
இதையடுத்து பாகிஸ்தானும் அதேபோலவே இந்தியாவுக்கான தூதரை நியமித்துள்ளது.சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் கான் தற்போது இந்தியத் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜாபருல்லா கான்ஜமாலி இதைத் தெரிவித்தார். அது பாகிஸ்தான் தொலைக்காட்சியிலும் நேற்று மாலை ஒளிபரப்புசெய்யப்பட்டது.
ஆனாலும் கானை இந்தியத் தூதராக நியமித்துள்ளது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றுபாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்.கிலிருந்து 20 இந்தியர்கள் விடுதலை:
இதற்கிடையே பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்கள் விடுதலைசெய்யப்பட்டு இன்று தாய் நாடு திரும்பினர்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி மொத்தம் 300 இந்தியமீனவர்களும், அத்துமீறி நுழைந்ததாக 22 இந்திய இளைஞர்களும் பாகிஸ்தான் கடற்படையினரால்பிடித்து சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்தது.இந்நிலையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமாதான முயற்சிகள் வலுப்பெற்றுவந்தன.
இதைத் தொடர்ந்து 322 இந்தியர்களையும் விடுதலை செய்வதாக ஜமாலி அறிவித்தார். அதன் முதல்கட்டமாக 14 இந்திய மீனவர்களும், 6 இந்திய இளைஞர்களும் இன்று காலை பஞ்சாப் எல்லையில்உள்ள வாகா பகுதி வழியாக இந்தியாவுக்குள் வந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்புப்படையினர் அன்புடன் வரவேற்றனர்.
இதேபோல் மற்ற 286 இந்திய மீனவர்களும், 16 இளைஞர்களும் விரைவில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications