சென்னை-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து மும்பைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) செல்லவிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்துசெய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக வேறொரு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள்பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.50 மணிக்கு மும்பை செல்லவிருந்த தாதர்எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தென்னக ரயில்வேஅறிவித்துள்ளது. இதனால் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர்.
அதற்குப் பதிலாக சிறப்பு ரயில் நாளை காலை 9 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாதர்எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்திருந்த பயணிகள் அதே வசதிகளுடன், புதிய சிறப்பு ரயிலில் செல்லஅனுமதிக்கப்படுவர்.
முன்னதாக இன்றே இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த ரயில் நாளை தான்இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications