அரசுக்கு டாக்டர்கள் கெடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளைக்குள் தங்களை அழைத்து அரசு பேச்சு நடத்தாவிட்டால் நாளை மறு நாள் முதல் (21ம் தேதி) திட்டமிட்டபடிவேலைநிறுத்தம் தொடங்கும் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து விட்டன.

தங்களுடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையையும் அரசுநிராகரித்துவிட்டது.

இந் நிலையில் அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிரகாசம் நிருபர்களிடம் பேசுகையில், எங்களுடன் பேச்சுநடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. எங்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

அது குறித்துக் கவலையில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்கத் தயார்.

நாளைக்குள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி நாளை மறுதினம் முதல் (21ம் தேதி) வேலைநிறுத்தம் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் போராட்டம் தொடங்கினாலும் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்படாது என அரசுகூறியுள்ளது. 21ம் தேதிக்கு முன்னதாகவே முடிந்தவரை தாற்காலிக டாக்டர்களை நியமித்துவிடுவோம் என அரசுகூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+