நீர்மூழ்கிக் கப்பலில் தங்கப் போகும் பெர்னாண்டஸ்
டெல்லி:
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு நாள் முழுவதும்நீர்மூழ்கியிலேயே தங்கியிருந்து கடற்படை வீரர்களின் செயல்பாட்டை நேரில் பார்வையிட உள்ளார்.
ஒரு நாள் இரவு முழுவதும் அவர் கடலுக்கடியில் நீர் மூழ்கியிலேயே தங்குவார்.
இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத அளவுக்கு உலகின் மிக உயரமான போர் முனையான சியாசினுக்கு 31தடவை போய் வந்துள்ளார் பெர்னாண்டஸ். மிகக் கடினமான பனிச் சூழலில் பணியாற்றும் வீரர்களுக்கு போதியகருவிகளை அனுப்பத் தவறிய ஒரு அதிகாரியை சியாசினுக்கு டிரான்ஸ்பர் செய்து வீரர்கள் படும் கஷ்டத்தைநேரில் பார்க்கச் செய்தார்.
ராணுவ முகாம்களுக்குச் செல்லும்போது அமைச்சருக்குரிய விசேஷ உணவுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டுவீரர்களுடன் சேர்ந்து உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பெர்னாண்டஸ்.
இந் நிலையில் கடற்படையின் கிழக்கு கமாண்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.என்.எஸ். சிந்த்வீர் நீர்மூழ்கியில் வரும்24ம் தேதி பயணம் செய்கிறார் பெர்னாண்டஸ். இரவு முழுவதும் அவர் நீர்மூழ்கியிலேயே இருப்பார். பாதுகாப்புக்காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நீர் மூழ்கி செல்லும் பாதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சேதுசமுத்திரப் பணிகளைப் பார்வையிடுவதற்காக கடலோரக் காவல் படையின்ஹோவர்கிராப்ட் கப்பலில் அவர் பாக் ஜலசந்திப் பகுதிக்குச் செல்லவுள்ளார். ஹோவர்கிராப்ட் ரக கப்பலில் பயணம்செய்யும் முதல் அமைச்சரும் இவர் தான்.
சமீபத்தில் துணைப் பிரதமர் அத்வானி ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு தங்கினார். இந்தவிமானம் தாங்கிக் கப்பலின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications