மண்டையை பிளக்கும் கத்திரி வெயில்: தகிக்கிறது தமிழகம்!
சென்னை:
தமிழ்நாடு முழுவதிலும் அக்னி நட்சத்திரம் உச்சத்தை எட்டியுள்ளது. கொளுத்தும் வெயிலால்தகித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. முதல் சில நாட்கள் சாதாரணமாக இருந்த கத்திரிவெயில் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
வீட்டிலும் உட்கார முடியாமல், வெளியிலும் போக முடியாமல் நரக வேதனையை அனுபவித்துவருகிறார்கள் மக்கள்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 105 டிகிரிக்கும் அதிகமான வெயில் அடிக்குக்கொண்டுள்ளது. சென்னையில் நேற்று 107 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது.
வேலூரில் 110 டிகிரியும் திருச்சியில் 105 டிகிரியும் மதுரையில் 106 டிகிரியும் வெயில் கொடுமைஉள்ளது.
வெயில் கொடுமைக்கு ஆங்காங்கே சிலர் பலியாகி வருகின்றனர். சென்னை அருகே திருவேற்காடுஎன்ற இடத்தில் 62 வயது முதியவர் வெயிலில் நடந்ததால் மயங்கி விழுந்து பலியானார்.
சென்னை நகரில் வெயிலில் இருந்து தப்பிக்க மாலை நேரத்தில் கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்அலை மோதுகிறது. கத்திரி வெயில் முடியப் போகும் தருவாயில் வெயில் கொடுமை மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.