ஜீப்புடன் சென்னையைக் கலக்கிய சினிமா போலீஸ்
சென்னை:
சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் போலீஸ் ஜீப்பில் சென்று, உண்மையான போலீஸ் மாதிரி கலக்கியநபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்ராஜ். இவர் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் போலீஸ்வேன், ஜீப்களை சினமா சூட்டிங்குக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.
இதுபோன்ற ஒரு போலீஸ் ஜீப்பில் (குவாலிஸ் ஜீப்) சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே அவர் சென்றார்.அப்போது தனக்கு வழி விட மறுத்த ஒரு காரை ஓவர்டேக் செய்து அதை தடுத்து நிறுத்தினார்.
தன்னை போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு அந்த கார்காரரை மிரட்டிக் கொண்டிருந்தார். இதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உண்மையான போலீஸ்காரர்அங்கு வந்தார்.
அப்போது தான் போலி போலீஸ் ஜீப்பில் வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நவீன்ராஜ் ஒரு போலிபோலீஸ் என்று தெரியவந்தது.
இதையடுத்து நவீன்ராஜூக்கு நான்கு அறைவிட்ட உண்மையான போலீஸ்காரர் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றார்.
இதே நவீன்ராஜ், சில மாதங்களுக்கு முன்பு அண்ணாசாலையில் உள்ள ஒரு மதுக் கடைக்கு அதே போல போலீஸ்வேனில் வந்திறங்கினார். அப்போது மதுக்கடைக்காரிடம் தகராறு செய்தபோது பிடிபட்டு கைதானார்.