திருட்டுப் பணத்தை கோவில்களுக்கு தானம் செய்த ஆசாமி!
சென்னை:
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மன்னார் என்ற நபர், தனது திருட்டுத் தொழில் மூலம்கிடைக்கும் பணத்தை கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் மன்னார் என்ற எழிலரசன். இவரது தொழிலே திருட்டுத்தான். கடந்த21 வருடமாக சளைக்காமல் திருடி வருகிறார். இதற்காக பலமுறை சிறை சென்று வந்துள்ளார்.ஆனால், திருந்தியதே இல்லை.
மொத்தம் இவர் மீது 150க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து திருடி வரும்மன்னார் லேட்டஸ்டாக மே 1ம்தேதிதான் விடுதலையாகி வெளியே வந்தார். இப்போது ரூ. 5 லட்சம்மதிப்புள்ள நகை, பணத்தைத் திருடியதாக அவர் மீணடும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரின் கதை வித்தியாசமானது. திருடிய பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஒருபகுதியை கோவில்களுக்குத் தானமாக கொடுத்து விடுவாராம்.
சென்னைப் புறநகரில் உள்ள பல கோவில்களுக்கும் இவர் இப்படி ஏராளமான திருட்டுப் பணத்தைதானமாக கொடுத்துள்ளார். சமீபத்தில் சைதாப்பேட்டையில் புதிதாக ஒரு கோவில் கட்டுவதற்குத்தேவையான பணத்தைக் கொடுத்துள்ளார்.
இந்துக் கோவில்களுக்கு மட்டுமல்லாது, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நன்கொடைஅளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications