கருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு
கொம்புக்காரநேந்தல்:
கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக மூத்ததலைவர்களான துரைமுருகன், பொன்முடி ஆகியோருக்கு எதிராக திமுகவினரே கோஷங்கள் எழுப்பினர்.
கருணாநிதியையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
நேற்று மாலை மதுரையில் இருந்து அவரது சொந்த ஊரான கொம்புக்காரநேந்தலுக்குக் கொண்டு வரப்பட்டகிருட்டிணனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான திமுகவினரும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்ட அவரது மகன் தொல்காப்பியன்இன்று மாலை தான் சென்னை வந்தடைவார் என்று தெரிகிறது. இதன் பின்னர் நாளை அவர்கொம்புக்காரநேந்தலுக்கு வந்தவுடன் கிருட்டிணனின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
அதே போல அமெரிக்காவில் இருந்து திரும்பிக் கொண்டு மு.க. ஸ்டாலினும் அவருடேனயே நாளை காலைகொம்புக்காரநேந்தல் வந்தடைவார் என்று தெரிகிறது. ஸ்டாலினின் தீவிரமாக ஆதரவாளராக இருந்தவர்தா.கிருட்டிணன்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று காலை கொம்புக்காரநேந்தலுக்கு வந்து தா.கிருட்டிணனின்உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக அங்கிருந்தவர்கள் கோஷம்எழுப்பினர்.
இதையடுத்து துரைமுருகனும் பொன்முடிவும் அங்கு வந்தபோது ஆவேசமடைந்த அந்த ஊர் மக்கள் அவர்களைத்தாக்க வந்தனர். பின்னர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லியும் சத்தம் போட்டனர். தொடர்ந்துகருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அங்கிருந்த ஊர் பெரியவர்கள் மக்களை அமைதிப்படுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.
இதற்கிடையே ஸ்டாலின் மதுரை வரும்போது அவரது ஆதரவாளர்களுக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும்இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர்க்கும் முயற்சிகளில் துரைமுருகனும்பொன்முடியும் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இரு தரப்பையும் சேர்ந்த முக்கிய புள்ளிகளை அவர்கள் சந்தித்துப்பேசி வருகின்றனர்.
இன்று இரவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் மதுரை வந்துசேருகின்றனர். கருணாநிதியின் சார்பில் இவர்கள் இருவரும் நாளைய இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications