For Daily Alerts
Just In
தியேட்டருக்குள் தற்கொலை செய்து கொண்ட உரிமையாளர்
சென்னை:
சென்னை அருகே உத்திரமேரூர் பகுதியில் கடன் தொல்லை காரணமாக டூங் தியேட்டர் உரிமையாளர்,தியேட்டருக்குள்ளேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவருக்கு ஈசூர் என்ற இடத்தில் மளிகைக் கடையும், புதூர்பகுதியில் டூங் தியேட்டரும் உள்ளன. தியேட்டரை நடத்த ஏகப்பட்ட கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் தியேட்டரில் வசூல் போதிய அளவு இல்லாததால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த அவர் தியேட்டர் டிக்கெட் கவுண்டருக்குள்ளேயே கைலியால் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து படாளம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Story first published: Wednesday, May 21, 2003, 5:30 [IST]