ஆடிட்டருக்கு பேக்ஸ் ஆன நிதியமைச்சக உத்தரவுகள்
சென்னை:
சென்னையில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு இடைத் தரகராக செயல்பட்ட ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கு நிதியமைச்சகத்தின் முக்கியடிரான்ஸ்பர் உத்தரவுகள் கூட பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
தன் மீதான குற்றசாட்டுகளை கிருஷ்ணமூர்த்தி மறுத்தாலும் அவர் வசமாக மாட்டியுள்ளார். இவர் மூலமாக செஞ்சிராமச்சந்திரனின் பி.ஏ. பெருமாள் சாமிக்கு லஞ்சம் கொடுத்த வருமான வரித்துறை அதிகாரி அனுராக் வர்தனின் டிரான்ஸ்பர் ஆர்டர்காப்பி இவருக்கு பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மிக முக்கிய துறையான நிதியமைச்சகத்தின் உத்தரவுகள் கூட இவருக்கு பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது சி.பி.ஐ.அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள செஞ்சி ராமச்சந்திரனின் அலுவலகத்தில் இருந்தே இந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பெருமாள்சாமி பேக்ஸ் செய்துள்ளார்.மேலும் டெல்லியில் உள்ள அனுராக் வர்தனிடம் இருந்து கிருஷ்ணமூர்த்தி வந்த டெலிபோன்களும் காலர் ஐடி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த நெட்வொர்க் மிக professional ஆக நடந்துள்ளது என்கின்றனர் நம்மிடம் பேசிய சிபிஐ அதிகாரிகள். இதில்முக்கிய குற்றவாளி அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தான் என்கின்றது சிபிஐ.
இதற்கிடையே நேற்று சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை டெல்லி கொண்டு செல்லநீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்று சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை மேற்கொண்டு விசாரணைக்காக டெல்லிக்குக் கொண்டு செல்ல சிபிஐ அதிகாரிகள் அனுமதிகோரினர். இதற்கு நீதிபதி அனுமதி தந்தார். இதையடுத்து இன்றே அவர் டெல்லி கொண்டு செல்லப்படுவார் எனசிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications