டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் ஆதரவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணிமேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கொண்டு வந்தஅரசாணைக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒரிஸ்ஸா முதல்வரின்ஆதரவும் கிடைக்கும் என்று தெரிகிறது.

கடலோரங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு அரசாணையைபாலு வெளியிட்டார். அதில் கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் ரூ. 5 கோடிக்கு மேல்எந்தக் கட்டடம் கட்டினாலும் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இந்த ஆணை மூலம் மாநிலஅரசின் அடிப்படை உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இதைஎதிர்க்க கடற்கரை மாநில முதல்வர் ஒன்று திரள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முதலில் கேரள முதல்வர் ஆண்டனியிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியகடிதத்தில் டி.ஆர்.பாலுவின் ஆணையை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.

இப்போது ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில், உங்கள்கடிதத்தில் உள்ள விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறேன். மாநில அரசுகளின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும். விரைவில் இந்த விஷயத்தில் எனது முடிவைத் தெரிவிக்கிறேன் என்று கூறபபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+