திருச்சியில் கன மழை .. சென்னையில் வெறும் தூறல்
திருச்சி:
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. ஆயினும், தலைநகர்சென்னையில் மழை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் காட்டி வருகிறது.
கடும் கோடையிலும் கூட தமிழகத்தின் தென் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து மக்களைமகிழ்வித்து வருகிறது. ஆனால், வட மாவட்டங்களில் மழையே இல்லை. குறிப்பாக சென்னையில்.
சனிக்கிழமை இரவு திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்தது. இதனால் கடுமையாகநிலவி வந்த வெப்பம் வெகுவாக தணிந்து குளுமை சூழ்ந்தது. இரவு நெடு நேரம் மழை பெய்ததால்,விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், சென்னையில் மேகம் தான் கூடுகிறது. ஆனால், மழை பெய்வதில்லை. மழை வருவதுபோல மேகம் திரண்டு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு கடைசியில் வெயில் அடிக்கஆரம்பிக்கிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேகம் திரண்டு இருட்டியது. ஆயினும் மிக லேசான தூறல்மட்டும் போட்டுவிட்டு வெயில் ஆரம்பித்துவிட்டது.
தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நிகரங்களில் 105 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகிறது.அதிகபட்சமாக அரக்கோணத்தில் நேற்று 115 டிகிரி வெயில் அடித்தது. கடும் வெயிலால்அரக்கோணத்தில் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை, மதுரையில் தலா 105 டிகிரியாக வெயில் இருந்தது. கோவையில் 97 டிகிரி வெயில்இருந்தது.