For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூன்று பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு தாய் முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

ஓசூர்:

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், பச்சிளம் குழந்தை உள்பட 3 குழந்தைகளுக்கும் விஷம்கொடுத்து தானும் விஷம் குடித்தார் தாய். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம் முக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயக் கூலித் தொழிலாளி.இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி காரணமாக முருகேசனுக்கு வேலை ஏதும் இல்லை.சாப்பாட்டுக்கே குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளது. வறுமையில் வாடி வந்த கெளரிகர்ப்பமானார்.

சில நாட்களுக்கு முன் கெளரிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் முருகேசன்குடும்பம் விரக்தியில் ஆழ்ந்தது. பிறந்த குழந்தைக்கு மருந்து வாங்கக் கூட அவர்களிடம் பணம்இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் கெளரி.

பிறந்து சில நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தை உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் விஷம்கொடுத்த அவர் தானும் விஷம் குடித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் உடனடியாகஅனைவரையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X