திமுக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் விரைவில் கைது
ஈரோடு:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுதெரிகிறது.
இவர் வருமானத்தை மீறி பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகலஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகின்றனர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் இவர் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.
வருமானத்துக்கு மீறி சொத்து குவித்ததாக அந்தியூர் செல்வராஜ் உள்பட உள்ளிட்முன்னாள்அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி,என்.கே.கே. பெரியசாமி,
கே.என். நேரு, செங்குட்டுவன், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி , மதுரைமுன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட தி.மு.க. முக்கியத் தலைவர்களின் வீடுகள், மற்றும்உறவினர் வீடுகளில் போலீஸார் அவ்வப்போது சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால்ரெய்டுகள் தான் தொடர்ந்து கொண்டுள்ளவே தவிர எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திணறி வருகின்றனர்.
இந் நிலையில் விரைவில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.நாஞ்சில் குமரனுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ரெய்டுகளை அவர் மேலும் அதிகப்படுத்தியுள்ளார். தினமும் யாராவது ஒரு திமுக தலைவர்வீட்டில் சோதனைகள் நடந்தபடி உள்ளன. பொதுப் பணித்துறை அதிகாரிகள் உதவியுடன்திமுகவினரின் வீடுகள், உறவினர்களின் வீடுகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
இதில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் விஷயத்தில் சில குறிப்பிடத்தக்கஆதாரங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியும் எனபோயஸ் கார்டனுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் தகவல் தந்துள்ளனர்.
இதையடுத்து இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு அந்தியூர் செல்வராஜைகைது செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தியூர் செல்வராஜைத் தொடர்ந்து துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் கே.என்.நேரு ஆகியோரும் கைதாகலாம் என்று தெரிகிறது.