தா.கி. கொலை: போலீஸ்காரர் மகன் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கொலையாளிகளுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதாக மேலும் 3 பேரைமதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், மணி, செந்தில்குமார் ஆகிய 3 பேரும், தா.கி. படுகொலை தொடர்பாக,டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஹோட்டலில் விவாதித்த கும்பலுடன் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் என்றுதெரியவந்துள்ளது.
இவர்களிடம் விசாரணை நடத்தினால் தா.கி.கொலை தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றுபோலீஸார் நம்புகிறார்கள். செந்தில்குமார் என்பவரின் தந்தை போலீஸ்காரர் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, தா.கி.கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஈஸ்வரன் என்பவர் பரமக்குடி நீதிமன்றத்தில்சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications