பசுவை தாக்கிய சிறுத்தை கிணற்றில் விழுந்தது: திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பு
திண்டுக்கல்:
கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தையை மக்கள் விரட்டிச் சென்றபோது அது தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. அதைமீட்க நேற்றிரவில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து அந்த மாடு எழுப்பிய அலறல் சப்தம் கேட்டு அந்த வீட்டினர் வெளியே வந்தபோது தான் சிறுத்தைநுழைந்தது தெரிந்தது. உடனே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுத்தையை விரட்டினர்.
மக்கள் கூட்டத்தைப் பார்த்த அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடியது. மக்களும் அதை விடாமல் துரத்தினர்.
இந் நிலையில் அந்த சிறுத்தை கிராமத்தின் குடிநீர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. கிணற்றில் இருந்தவண்ணம் அதுதொடர்ந்து உருமிக் கொண்டுள்ளது.
சிறுத்தை கிணற்றில் விழுந்த தகவல் அறிந்த பொள்ளாச்சி வனச் சரக அதிகாரிகள் இன்று காலை அந்தகிராமத்துக்கு வந்தனர். நீரில் மூழ்கி சிறுத்தை இறந்துவிடாமல் தடுக்க, பம்ப் செட்கள் மூலம் தண்ணீரைவெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இன்று இரவுக்குள் சிறுத்தை மீட்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.