For Daily Alerts
Just In
இன்றும் அனலில் தகித்தன வட மாவட்டங்கள்: தெற்கிலோ மழை!!
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்கள் தொடர்ந்து கடும் அனலில் தகித்து வருகின்றன.
வட மாவட்டங்களில் கடும் வெப்ப நிலை மேலும் இரு நாட்கள் நீடிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிமையம் கூறியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் கேரளத்தில் இருந்து தென் மேற்குப் பருவக் காற்று வீச ஆரம்பித்துவிடும் என்பதால்தென் தமிழகத்தில் மேலும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே கடும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை 1,281 பேர் அனல்காற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆந்திராவைத் தொடர்ந்து ஒரிஸ்ஸாவும் ராஜஸ்தானும் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் நாட்டிலேயே மிக அதிக வெப்பம் பதிவாவதில் அரக்கோணம், வேலூர், சென்னை ஆகியயநகரங்கள் முதல் 10 இடத்தில் உள்ளன.
Comments
cinema chennai sri lanka vit secretary Prabhakaran thatstamil university trisha tamilnadu shakeela tamil news madras sakeela iit madras
Story first published: Friday, June 6, 2003, 5:30 [IST]