Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தா.கி. கொலை வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கை விசாரித்து வரும் மதுரை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்சுந்தரேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக மாரிமுத்து என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக தனது புதியபொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த வழக்கில் திமுகவிர் மீது போதிய அளவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மதுரைகமிஷ்னராக இருந்த கந்தசாமி மீதும், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீதும் முதல்வர்ஜெயலலிதா அதிருப்தியில் இருந்தார்.

இதையடுத்து முதலில் கமிஷ்னர் மாற்றப்பட்டார். இப்போது இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டுள்ளார்.

சுலைமானை அப்ரூவர் ஆக்க முயற்சி!:

இந் நிலையில் இந்தப் படுகொலை தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்த இப்ராகிம் சுலைமான்சேட்டிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அப்ரூவர் ஆக மாற்றபோலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் சுலைமான் சேட் தான் முக்கியக் குற்றவாளியாககருதப்படுகிறார். கொலைச் செய்ததே இவர் தான் என்று போலீஸார் உறுதியாக கூறுகிறார்கள்.

இப்போது இவர் மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.அவரிடமிருந்து சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவரை அப்ரூவர்ஆக்கவும்முயற்சிகள் நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அவரை அப்ரூவர் ஆக்கும் அதே நேரத்தில், இந்தக் கொலையில் அழகிரிக்கும் நேரடித்தொடர்புள்ளதாக கூறுமாறு போலீசார் அவரை மிரட்டி வருவதாக அழகிரி ஆதரவாளர்கள்கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+