ஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை துணை பிரதமர் அத்வானி வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் , ஈராக் அமைதிப் பணிக்கு இந்தியப் படைகளை அனுப்புவதுஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
அரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் பிற சர்வதேச விவகாரங்கள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் அத்வானி நிருபர்களிடம் கூறினார்.
அவர் கூறியதாவது: ஈராக் அமைதி காக்கும் பணியில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியப் படைகளையும்ஈடுபடுத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் இருமுறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்ஆலோசனை நடத்த அமெரிக்கக் குழுவை புஷ் இந்தியா அனுப்ப உள்ளார்.
பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பிரதமர் வாஜ்பாய் எடுத்து வரும் நடவடிக்கைகளை புஷ் வெகுவாகப்பாராட்டினார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அதிபர் புஷ்சுடன்பேசினேன். விரைவில் புஷ் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றார் அத்வானி.
புஷ்ஷை அத்வானி சந்தித்தபோது இந்திய உளவுத்துறையின் (ஐ.பி) தலைவர் கே.பி.சிங்கும், உள்துறை செயலாளர்கோபாலசாமியும் உடனிருந்தனர்.
அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்சையும் அத்வானி சந்தித்துப் பேசினார்.