தலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொதுக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன்கோரி முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முல்லை வேந்தன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.இதையடுத்து அவரது தொகுதியான தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம்நடந்தது.

இந்தக் பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகளை கூட்டத்துக்குள் வெடித்தனர்.இதில் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கப் போன தஸ்தகீர் என்ற வாலிபர் உடல் சிதறி இறந்தார்.

இதையடுத்து முல்லைவேந்தன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், முல்லைவேந்தன் தரப்பில் காவல் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதில் எங்களைக் கொல்லஅதிமுகவினர் கூட்டத்தில் குண்டு வைத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், தன் போலீசார் வழக்குப் போட்டுவிட்டதால் கைதாகாமல் தப்புவதற்காக முல்லைவேந்தன்தலைமறைவாகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

தங்களை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால், முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேரும் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, மனுதாரர்கள் பட்டாசு வெடித்த சம்பவத்தை, எதிர்க் கட்சியினர் தங்களைக்கொல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.

எனவே அவர்களது முன் ஜாமீன் நிராகக்கப்படுகிறது என்று கூறி தள்ளுபடி செய்தார். இதையடுத்துமுல்லைவேந்தன் போலீசாரிடம் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+