ஏட்டு மனைவி கற்பழிப்பு?: சப்-இன்ஸ்பெக்டர் கைது
சேலம்:
ஏட்டையாவின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே குடியிருப்பில் வசித்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் மதனலோகன் (வயது 40) தேவூர் காவல் நிலையத்தில்சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் பெயருக்கு ஏற்ற மாதிரியே மன்மதனலீலைகளுக்கும் பெயர் போனவர்.
இவருக்கும் புஷ்பாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டாடதாகத் தெரிகிறது. அடிக்கடி காசியின் வீட்டுக்குப் போய்புஷ்பாவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வந்துள்ளார் மதனலோகன்.
இந் நிலையில் காசி விஸ்வநாதன் நேற்றிரவு இரவு ரோந்துப் பணிக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து அவர்வீட்டுக்குத் திரும்பியபோது உள்ளே மதனலோகனும் தனது மனைவி புஷ்பாவும் இருப்பதைப் பார்த்துவிட்டார்.
கணவர் வந்துவிட்டதை உணர்ந்த புஷ்பா, தன்னை மதனலோகன் கற்பழிக்க வந்ததாக சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காசி விஸ்வநாதன் வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரிடம்தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வீட்டை மக்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே சேலத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும் காசிவிஸ்வநாதன் புகார் கொடுத்தார். தனது மனைவியை மதனலோகன் கற்பழிக்க முயன்றதாக அவர் புகார்தந்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் மானத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மதனலோகன் கைது செய்யப்பட்டார்.