Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபச்சாரம்: 2 கேரள துணை நடிகைள், "கஸ்டமர்கள்" கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் வாடகை வீட்டில் விபச்சாரம் செய்த மலையாள திரையுலகைச் சேர்ந்த 2 துணைநடிகைகள், அவர்களுடன் ஜாலியாக இருக்க வந்த 6 வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தி.நகரில் உள்ள விவேகானந்தர் தெருவில், ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு மாறு வேடத்தில் புகுந்தனர்.

அப்போது 2 கேரள துணை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு சென்ற போலீஸார் டோலி, ரமா என்ற ரமாதேவி ஆகிய இருதுணை நடிகைளையும் கைது செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,000 என்ற விகிதத்தில் இவர்கள்வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த காசிநாதன் என்பவரும்பிடிபட்டார். இவர்தான் வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த துணை நடிகைகளிடம் ஜாலியாக இருக்க வந்த ரமேஷ், கிருஷ்ணன்,சிவக்குமார், முரளி, பிரசாத், குமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+