பிறந்தநாள் கொண்டாடியதால் அடி: ஆசிரியர்கள் கொடுமையால் மாணவன் தற்கொலை
சென்னை:
பிறந்த நாள் கொண்டாடுவதற்காக ஸ்பெஷல் கிளாஸுக்கு வராத மாணவனை, பள்ளி ஆசியர்கள் அடித்து,உதைத்தனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
நேற்று முன்தினம் ராமுக்கு பிறந்த நாள். இதையொட்டி தனது உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசி வாங்கச்சென்றார். இதனால் அன்று வைக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் கிளாஸுக்குப் போக முடியவில்லை.
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றபோது அவனை ஆசியர்கள் கடுமையாக கண்டித்து, அடித்துள்ளனர். தனது பிறந்தநாள் என்று சொல்லியும் கூட, என்னடா பெரிய பிறந்த நாளு? என்று சொல்லி அடித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போனான் ராம். வீட்டுக்குத் திரும்பிய அவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வேலம்மாள் பள்ளி ஆசியர்கள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போவதாக மாணவனின்பெற்றோர் அறிவித்துள்ளனர்.
சென்னை நகரில் கண்டிப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் பல பள்ளிகளில், ஆசியர்கள் மிகவும் மிருகத்தனமாகநடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. ஆசிரியர் அடித்து கண் பறிபோனது, மண்டை உடைந்தது, கைஉடைந்தது என்ற புகார்கள் வருகின்றன.
ஆனாலும் இச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தவிர்க்க எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத்தெரியவில்லை.












Click it and Unblock the Notifications