கும்பகோணம் மகாமக திருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமகத் திருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கு மகாகமக் குளத்தில்புனித நீராடி வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 6ம் தேதி மகாமகத் திருவிழா நடக்கவுள்ளது.

தேசிய கலாச்சார மையத்தின் தலைவர் டாக்டர் என்.பி. சேஷாத்ரி இன்று கும்பகோணத்தில் நிருபர்களிடம்கூறியதாவது:

உலகப் புகழ்பெற்ற இந்தத் திருவிழாவை இதுவரை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இந்த மகாமகம்நடைபெறும் சந்திர புஷ்கரணி மற்றும் சூரிய புஷ்கரணி ஆகிய இரு மாபெரும் குளங்களும்ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கி சீரழிந்து வருகின்றன.

இந்தக் குளங்களில் இப்போது குடிசைகளும் கட்டடங்களும் தான் உள்ளன. நீரே இல்லை. நீர் வரும் வழிகள்அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன.

இவற்றை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

மகாமகம் திருவிழாவை தேசிய விழாக்களில் ஒன்றாக அறிவிக்க நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அடுத்தஆண்டு இந்த விழா நடக்கும்போது அது தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டுவிட வேண்டும் என்று முயற்சித்துவருகிறேன்.

கும்பகோணம் ஒரு கலாச்சார மையம். இதை சுற்றுலாத் தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+