For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவை சந்திக்கிறார் ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

இச் சந்திப்பு நாளை நடக்கலாம் என வேலூர் மாவட்ட மதிமுக, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் வழியில் வந்த ப.சிதம்பரமும், புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவும் அரசியல்ரீதியில் எதிரெதிர்துருவங்களில் உள்ளவர்கள். இருவருக்கும் இடையே பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதை உண்டு.

பா.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியிலும் வைகோ திமுகவில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும்கைகுலுக்கிக் கொள்வதை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.

ராஜிவ் கொலைக்குப் பின் புலிகளை மிகத் தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்த ப.சிதம்பரம், வைகோவுடனும்தூரத்தையே கடை பிடித்து வந்தார். இந் நிலையில் இருவரும் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ப.சிதம்பரம், வைகோவைச்சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொடா சட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் சிதம்பரம், வைகோவின் கைதைஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X