சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2 வது இடம்
திருச்சி:
இந்தியாவில், சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2வது இடம் வகிக்கிறது என்று மத்திய தொலைத் தொடர்புத்துறைஇணையமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே மென்பொருள்(சாப்ட்வேர்) ஏற்றுமதியில்கர்நாடகம், தமிழகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்கள்தான் முன்னணி வகிக்கின்றன. இதில் கர்நாடகம் ஆண்டுக்குரூ.13,000 கோடிகும், தமிழகம் ரூ. 10,000 கோடி அளவுக்கும் மென்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
மென்பொருள் ஏற்றுமதியை அதிரிகக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.மென்பொருள் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒருகட்டமாக சாதனையாளர் விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தாலும் ஹார்ட்வேர் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதை அதிகரிக்க உலக அளவில் ஹார்ட்வேரில் முன்னணியில் உள்ள 20 நிறுவனங்களுடன்ஒப்பந்தம் செய்து கொள்ளவும் அவர்களை இந்தியாவில் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். செல்போனின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. இந்தியாவில் மொத்தம் 40 லட்சம்பி.எஸ்.என்.எல். இணைப்புகள் உள்ளன. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்திருநாவுக்கரசர்.