For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொங்கன் ரயில் விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

வைபவ்வாடி (மகாராஷ்டிரா):

மகாராஷ்டிரத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுவிபத்துக்குள்ளானது. சுரங்கப் பாதையில் தண்டவாளத்தில் கிடந்த பாறையில் மோதியதில் இந்த விபத்துஏற்பட்டது.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 51 ஆக உயர்ந்துவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்தது. உருக்குலைந்து கிடக்கும் பெட்டிகளில்இருந்து உடல்கள் எடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அந்தப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அங்கு நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டுதண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தான் விபத்து ஏற்பட்டது. கடும் மழைக்கு இடையிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 60 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில்இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொங்கன் ரயில்வே நிர்வாகம் சரியான முறையில்விவரங்களைத் தரவில்லை.

இதனால், இறந்தவர்கள் யார் என்று தெரியாமல் அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் தவித்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X