For Daily Alerts
Just In
தஞ்சை ஆயரின் ஜாதி பாகுபாடு: பாதிரியார்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவராஜ் அம்புரோஸ் குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி,மாவட்ட பாதிரியார்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மறைமாவட்ட ஆயராக இருப்பவர் தேவராஜ் அம்புரோஸ். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பதவியில்இருக்கிறார். இவரது நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் பெரும் அதிருப்தியில்உள்ளனர்.
குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே அவர் ஆதரவாக இருப்பதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும்பாதிரியார்கள் குறை கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரோம் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை அலுவலகத்திற்கும் புகார்அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், ஆயர் இல்லம் முன் இன்று காலை முதல்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu simran sherin kiran tamil news ramya pictures sham jothika vijay kanth aunties sex
Story first published: Wednesday, June 25, 2003, 5:30 [IST]