கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி ஏழை மாணவிக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அர்ச்சனா, அவரது பொறியியல் பட்டப்படிப்பை தடையின்றி தொடருவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 1,00,440 நிதியுதவி அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பி.எல்.அர்ச்சனா. ஏழை குடும்பத்தில் பிறந்த அர்ச்சனாபிளஸ் டூவில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், அவருக்கு கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூயில்இடம் கிடைத்தது.
அங்கு முதலாவது ஆண்டை திக்கித் திணறி முடித்தார். 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பண வசதிஇல்லாததால், அடுத்த ஆண்டுப் படிப்பைத் தொடர முடியாமல் தவித்தார்.
தனது நிலையை விளக்கி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் எழுதினார். அதைப் பரிசீலித்த ஜெயலலிதா,மாணவி அர்ச்சனாவை சென்னைக்கு வரவழைத்து, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கினார்.
இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுப் படிப்பை எந்தவித தடங்கலும் இன்றி மாணவி அர்ச்சனாவால் தொடர முடியும்.
தக்க சமயத்தில் தனக்குப் பேருதவி புரிந்த முதல்வருக்கு மாணவி அர்ச்சனாவும், அவரது குடும்பத்தினரும் நன்றிதெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications