நீதிபதி தலைமறைவு: வீட்டுக் கதவில் ஒட்டப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு
ஓசூர்:
கள்ளச் சாராய வியாபாரியின் மனைவியை மானபங்கப்படுத்த முயன்ற பாலக்கோடு குற்றவியல் நீதிபதிபன்னீர்செல்வம் தலைமறைவாகிவிட்டதால், அவரது பணி நீக்க உத்தரவு வீட்டுக் கதவின் மீது ஒட்டப்பட்டது.
பாலக்கோடு அருகே உள்ளது காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணின் கணவர் கள்ளச் சாராயவழக்கில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை, பழனி என்பவர் செல்வியை அணுகி,வழக்கு தொடர்பாக பேசுவதற்காக மாஜிஸ்திரேட் கூப்பிட்டதாக கூறியுள்ளார். ஆனால் செல்வி செல்லமறுத்துவிட்டார்.
இதையடுத்து இரவில் தனியே இருந்த செல்வியின் வீட்டுக்கு நீதிபதி பன்னீர்செல்வம் வந்தார். அந்தப் பெண்ணைமானபங்கப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து செல்வி குரல் எழுப்பவே, கிராமத்தினர் ஓடி வந்து நீதிபதியை பிடித்து கட்டிப் போட்டுகாவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தத் தகவலை காவல்துறையினர் மாவட்ட நீதிபதிக்கும், உயர்நீதிமன்றதலைமை நீதிபதிக்கும் தெரிவித்துவிட்டு பன்னீர்செல்வத்தை விடுவித்தனர்.
இந் நிலையில் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் உயர் நீதிமன்ற நீதிபதி. இந்த சஸ்பெண்ட் உத்தரவைப்பெறக் கூட அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.
ஆனால், வீடும் பூட்டப்பட்டிருந்தது. நீதிபதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது வீட்டுக் கதவில்சஸ்பெண்ட் உத்தரவை அதிகாரிகள் ஒட்டினர்.
பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால் பாலக்கோடு நீதிமன்றப் பொறுப்புகளை பென்னாகரம் பகுதிகுற்றவியல் நீதிபதி வைத்தியனாதன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் மீது எந்தத் தவறும் இல்லை. அவரை சாராய வியாபாரியின் ஆட்கள்வீட்டிலிருந்து கடத்தி வந்து செல்வியுடன் வைத்து படம் எடுத்தனர் என்று அந்த ஊர் மக்களில் ஒரு பிரிவினர்கூறுகின்றனர். இதை ஒரு மனுவாக மாவட்டக் கலெக்டரிடமும் தந்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க சாராய வியாபாரிகளின் சதி என்றும் தெரிவித்துள்ளனர்.