காங். பூசலால் சோனியா எரிச்சல்: தமிழக பயணம் ரத்து
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் வலுத்துள்ளதால் அடுத்த மாதம் 19ம் தேதி சென்னையில்நடக்கவிருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவை சோனியா காந்தி ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்அவரது தமிழகப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கும் செயல் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல்வெடித்தது. இதைத் தீர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது. இந் நிலையில் காமராஜர் விழா குறித்துவிவாதிக்க சென்னையில் காங்கிரஸ் மத்தியத் தலைவர்களான கமல்நாத், கெய்க்வாட் ஆகியோர் நடத்தியகூட்டத்தை ஜி.கே வாசன்- சோ.பா. கோஷ்டி புறக்கணித்துவிட்டது.
மேலும் தனிக் கூட்டமும் நடத்தி தங்களது எதிர்ப்பை சோனியாவுக்குக் காட்டிவிட்டனர் முன்னாள் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர்கள்.
இதனால் வெறுப்படைந்த சோனியா தனது தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. 19ம் தேதிகாங்கிரஸ் சார்பில் நடக்க இருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாககாமராஜர் பிறந்த விருதுநகரில் பொதுக் கூட்டம் மட்டும் நடத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.