பாலக்கோடு நீதிபதி மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகார்

Subscribe to Oneindia Tamil

Judge Paneerselvamபாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பன்னீர் செல்வம் மீது மேலும் இரு பெண்கள்,பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.

பாலக்கோடு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பன்னீர் செல்வம், தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை கற்பழிக்கமுயன்றதாக அதே ஊரைச் சேர்ந்த செல்வி என்ற பெண் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, பன்னீர் செல்வத்தை தற்காலிக வேலைநீக்கம்செய்து உத்தரவிட்டார்.

ஆனால், புகாருக்குப் பிறகு பன்னீர் செல்வம் தலைமறைவாகி விட்டதால் அவரது வீடு பூட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டின் கதவில் வேலை நீக்க உத்தரவு ஒட்டப்பட்டது.

இந் நிலையில் பன்னீர் செல்வம் மீது மேலும் இரு பெண்கள் புகார் கூறியுள்ளார். பாலக்கோடு, அண்ணா நகர்பகுதியைச் சேர்ந்த வள்ளி (வயது 30) என்ற சாராயம் விற்கும் விதவைப் பெண், தனது வீட்டிற்கும் பல முறை இரவுநேரங்களில் வந்த நீதிபதி பன்னீர் செல்வம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறியுள்ளார்.

அடிக்கடி தன் வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து பன்னீர் தொல்லை கொடுத்ததாக உயர் நீதிமன்ற தலைமைநீதிபதிக்கும் இந்தப் பெண் புகார் அனுப்பியுள்ளார்.

ஆனால், இந்தப் பகுதி சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்புகள் வழங்கியதாலும்,கள்ளச் சாராய வியாபாரிகளை ஜாமீனில் விட மறுத்ததாலும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் தங்கள்வீட்டுப் பெண்களை வைத்து மாஜிஸ்திரேட் மீது தவறான புகார்களைக் கூறி வருவதாக பாலக்கோடு பகுதி மக்களில்ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Selvi

நீதிபதி மீது முதலில் புகார் சொன்ன செல்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+