ஒரிஸ்ஸா நதியை தமிழக நதியுடன் இணைக்க ஜெ. கோரிக்கை
கோவை:
ஒரிஸ்ஸாவில் ஓடும் மகாநதியை தமிழகத்தின் குண்டாறு ஆற்றுடன் இணைத்தால் மட்டுமே தென்னிந்தியாவில்தண்ணீர்ப் பிரச்சினைக்கு விடிவு ஏற்படும்.
எனவே இதை நிறைவேற்ற மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தது.பட்டத்தை ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம் மோகன் ராவ் வழங்கினார். இது ஜெயலலிதாவாங்கியுள்ள 4வது டாக்டர் பட்டமாகும். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், மதுரை காமராஜ், சென்னைப்பல்கலைக்கழகங்களில் இதற்கு முன் ஜெயலலிதா டாக்டர்கள் பட்டங்களை வாங்கியுள்ளார். |
|
இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தென்னிந்திய நதிகள் இணைப்பின் கீழ், மகாநதியை, குண்டாறுடன்இணைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.
தமிழக அரசின் பல்வேறு விவசாய, மழை நீர் சம்பந்தப்பட்ட திட்டங்களில் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக மாணவர்களும் பங்கெடுத்து கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்என்றார் ஜெயலலிதா.
முன்னதாக பீளமேடு விமான நிலையத்தில் இருந்து 72 (7+2= ராசி எண் 9) கார்கள் அணி வகுக்க ஜெயலலிதாகோவை பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.