நம்பிக்கையை சுமந்து கொண்டு 35 ஆண்டு காலமாய்...
சென்னை:
35 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி தமிழக மனித உரிமைஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார், சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படை போர் விமானியானசோமசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி.
1968ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியிலிருந்து 90 ராணுவ வீரர்களுடன்சண்டிகருக்கு விமானப் படையின் பயணிகள் விமானத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் துணை விமானிபி.என்.மல்ஹோத்ரா உள்பட 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
பாகிஸ்தான்- இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ரோதங் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதிடீரென்று தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்தது.
ஆனால், எங்குமே விமானம் சிக்கவில்லை. இறுதியில் ரோதங் மலைப் பகுதியில் விமானம் மோதி விபத்தில்சிக்கியிருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும்முடிவு செய்ய்பட்டது.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியும் 9 மாத விசாரணைக்குப் பின் இதே முடிவையே அறிவித்தது.ஆனால், விமானத்தின் பாகங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் கிடைத்த ஒரு தகவல் விஜயலட்சுமிக்குப் புதிய நிம்பிக்கையைக் கொடுத்தது. சோமசுந்தரம்இயக்கிச் சென்ற விமானத்தில் உதவி விமானியாக இருந்த பி.என்.மல்ஹோத்ரா பாகிஸ்தான் சிறையில் போக்கைதியாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திதான் அது.
மல்ஹோத்ரா உயிருடன் இருப்பதால் தனது கணவரும் உயிருடன்தான் இருப்பார் என்று நம்பும் விஜயலட்சுமிஇதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மனித உமை ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைஆணையத்துடன் தொடர்பு கொண்டு சோமசுந்தரம் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் விஜயலட்சுமி.
வயதாகிவிட்ட நான் மரணத்தை எந்த நேரமும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன். ஆனாஸ், நான் சாகும்போதுநான் திருமதி விஜயலட்சுமி சோமசுந்தரமா அல்லது விதவை விஜயலட்சுமியா என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்பவில்லை.
என் இறப்புக்கு முன் கணவரைப் பார்த்து விடுவேன், அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயலட்சுமி.
சோமசுந்தரம் உயிரோடு இருந்தால் அவருக்கு வயது 70 ஆக இருக்குமாம். இந்தியா-பாகிஸ்தான் இடையேஉறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயலட்சுமியின் நம்பிக்கை பலிக்க வாழத்துவோம்.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications