நம்பிக்கையை சுமந்து கொண்டு 35 ஆண்டு காலமாய்...
சென்னை:
35 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி தமிழக மனித உரிமைஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார், சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படை போர் விமானியானசோமசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி.
1968ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியிலிருந்து 90 ராணுவ வீரர்களுடன்சண்டிகருக்கு விமானப் படையின் பயணிகள் விமானத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் துணை விமானிபி.என்.மல்ஹோத்ரா உள்பட 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
பாகிஸ்தான்- இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ரோதங் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதிடீரென்று தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்தது.
ஆனால், எங்குமே விமானம் சிக்கவில்லை. இறுதியில் ரோதங் மலைப் பகுதியில் விமானம் மோதி விபத்தில்சிக்கியிருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும்முடிவு செய்ய்பட்டது.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியும் 9 மாத விசாரணைக்குப் பின் இதே முடிவையே அறிவித்தது.ஆனால், விமானத்தின் பாகங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் கிடைத்த ஒரு தகவல் விஜயலட்சுமிக்குப் புதிய நிம்பிக்கையைக் கொடுத்தது. சோமசுந்தரம்இயக்கிச் சென்ற விமானத்தில் உதவி விமானியாக இருந்த பி.என்.மல்ஹோத்ரா பாகிஸ்தான் சிறையில் போக்கைதியாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திதான் அது.
மல்ஹோத்ரா உயிருடன் இருப்பதால் தனது கணவரும் உயிருடன்தான் இருப்பார் என்று நம்பும் விஜயலட்சுமிஇதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மனித உமை ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைஆணையத்துடன் தொடர்பு கொண்டு சோமசுந்தரம் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் விஜயலட்சுமி.
வயதாகிவிட்ட நான் மரணத்தை எந்த நேரமும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன். ஆனாஸ், நான் சாகும்போதுநான் திருமதி விஜயலட்சுமி சோமசுந்தரமா அல்லது விதவை விஜயலட்சுமியா என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்பவில்லை.
என் இறப்புக்கு முன் கணவரைப் பார்த்து விடுவேன், அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயலட்சுமி.
சோமசுந்தரம் உயிரோடு இருந்தால் அவருக்கு வயது 70 ஆக இருக்குமாம். இந்தியா-பாகிஸ்தான் இடையேஉறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயலட்சுமியின் நம்பிக்கை பலிக்க வாழத்துவோம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications