Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பிக்கையை சுமந்து கொண்டு 35 ஆண்டு காலமாய்...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

35 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி தமிழக மனித உரிமைஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார், சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படை போர் விமானியானசோமசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி.

திருவான்மியூரில் தனது ஒரே மகனுடன் வசித்து வருகிறார் 66 வயதான விஜயலட்சுமி. இவரது கணவர்சோமசுந்தரம் இந்திய விமானப் படையில் சார்ஜென்ட்டாக பணியாற்றி வந்தவர்.

1968ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியிலிருந்து 90 ராணுவ வீரர்களுடன்சண்டிகருக்கு விமானப் படையின் பயணிகள் விமானத்தை ஓட்டிச் சென்றார். அவருடன் துணை விமானிபி.என்.மல்ஹோத்ரா உள்பட 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

பாகிஸ்தான்- இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ரோதங் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதிடீரென்று தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்தது.

ஆனால், எங்குமே விமானம் சிக்கவில்லை. இறுதியில் ரோதங் மலைப் பகுதியில் விமானம் மோதி விபத்தில்சிக்கியிருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும்முடிவு செய்ய்பட்டது.

இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியும் 9 மாத விசாரணைக்குப் பின் இதே முடிவையே அறிவித்தது.ஆனால், விமானத்தின் பாகங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந் நிலையில் சமீபத்தில் கிடைத்த ஒரு தகவல் விஜயலட்சுமிக்குப் புதிய நிம்பிக்கையைக் கொடுத்தது. சோமசுந்தரம்இயக்கிச் சென்ற விமானத்தில் உதவி விமானியாக இருந்த பி.என்.மல்ஹோத்ரா பாகிஸ்தான் சிறையில் போக்கைதியாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திதான் அது.

மல்ஹோத்ரா உயிருடன் இருப்பதால் தனது கணவரும் உயிருடன்தான் இருப்பார் என்று நம்பும் விஜயலட்சுமிஇதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மனித உமை ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைஆணையத்துடன் தொடர்பு கொண்டு சோமசுந்தரம் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கடந்த 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் விஜயலட்சுமி.

வயதாகிவிட்ட நான் மரணத்தை எந்த நேரமும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன். ஆனாஸ், நான் சாகும்போதுநான் திருமதி விஜயலட்சுமி சோமசுந்தரமா அல்லது விதவை விஜயலட்சுமியா என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்பவில்லை.

என் இறப்புக்கு முன் கணவரைப் பார்த்து விடுவேன், அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயலட்சுமி.

சோமசுந்தரம் உயிரோடு இருந்தால் அவருக்கு வயது 70 ஆக இருக்குமாம். இந்தியா-பாகிஸ்தான் இடையேஉறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயலட்சுமியின் நம்பிக்கை பலிக்க வாழத்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+