ஜார்ஜ் உள்ளிட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 9 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனராக இருந்து வந்த ஐ.ஜி. ஜார்ஜ், திருச்சியில் உள்ளமத்திய மண்டல ஐ.ஜியாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்து வந்த ஐ.ஜி. தியாகராஜன், மதுரைக்கு மாற்றப்பட்டு அங்கு பயிற்சிப்பிரிவு ஐ.ஜியாக அதிகாரம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் சரக டிஐஜியாக இருந்து வந்த ஜாங்கிட், சென்னை பயிற்சிப் பிரிவு டிஐஜியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக இருந்து வந்த கே.சி.மாகாளி தஞ்சாவூர் சரக டிஐஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்து வந்த ஏ.ஜி.மெளர்யா திருச்சி மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். வீராபுரம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3- பிவின் கமாண்டராகஇருந்து வரும் தாமரைக்கண்ணன், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
இதுதவிர மேலும் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஐ.ஜி. ஜார்ஜ் மீது சமீபத்தில் நடிகை மீரா ஜாஸ்மீனுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்தன. மீராவை ஜார்ஜ்தாக்கியதாகவும் கூட கூறப்பட்டது, ஆனால், இவற்றையெல்லாம் ஜார்ஜ் மறுத்திருந்தார்.
நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியின் கைதானபோது முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ்.